Tuesday, June 24, 2008

முதல் தமிழ் வலைபதிவு

வணக்கம் நண்பர்களே !
எனது 50 ஆவது வலைப்பதிவை தமிழில் எழுழ்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தியமொழி அனைத்தும் வழ்ங்கம்படும் இந்த மும்பை நகரம் மொழி மட்டுமல்லாது பல கலாச்சாரங்களின் தொகுப்பாக நான் கண்கிறேன்.சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாமானிய தமிழனாக, மும்பை பணியை கட்டாய தாலியாக ஏற்ற எங்களுக்கு, இந்த மாநகரம் கற்றுக் கொடுத்திருபவை ஏராளம்.எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ப்ரோக்ரம்மிங்கில் மட்டும் இருந்த எனது ஆர்வம், மொழி, கலாச்சாரம், லெமுரியா என்று பல பரிமானம் எடுத்து இங்குதான்.
எனது தாய் மொழி அல்லாத பிற மொழியை கேட்கவும் பேசவும் இங்கே வாய்ப்பு கிடைத்தது.தமிழின் அண்டைய மொழியான தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளை கேட்கும் போது நம் மொழியின் தொன்மையும், தொடர்பும் இனிமையும் புலப்படும்.தமிழின் தோற்றத்தின் மேல் ஆர்வம்; தமிழர் கலாச்சரத்தின் மீது மரியாதையை என பல மாற்றங்களை என்னுள் விதைத்தது மும்பை வாழ்க்கை.
நான் எழதிய 49 படிமத்தின் முடிவில், எதோ எனது எண்ணங்கள் அனைத்தும் எழுத்துகளாக மாறாமல் போனதுபோல் ஓர் மாயை மட்டுமே முடிவுரையாக நிற்கும்.தமிழில் சிந்தித்தால் .... இதோ ஒரு கச்சிதமான வரிவடிவம் பெற்றுஇருகிறது என் எண்ணம்.

நன்றி : கூகிள் transliterate

No comments: