Thursday, March 21, 2013

எழுவோம்



பத்துகோடி  பேரிருந்தும் நமது ஒற்றைகருத்தை  
எடுத்தியம்பும் சித்தமான தலைமை  காணோம் !
திரைச்சித்திரம்  எனும் மாயைதனில்  தினம் நித்திரை கண்ட 
இளரத்தங்கள் யாவும், அறயுத்தம் புறிந்திட விளைந்தோம் !
அரசியல் விடுத்த; அறமும்,  பொருளும் மென் அறிவியலும்
அடிமைக்கு வித்திட்ட சூத்திரமென்பதை மறவோம்
இடைவந்த  மதம்விடுத்து , இடர்தரும் சாதி தகர்த்து 
நெறிகூரும் நம்  மொழியால் இணைவோம் !

No comments: